Friday, February 6, 2009

ஒளி விளக்குகளே

முத்துக்குமார் பத்த‌ல்லீயா…

-----------------------------------------------------------------------------------------------------------------------------




ஒளி சிந்தும் விளக்குகளே
கவர்ந்து இழுத்த்
விட்டில்கள் போதாதா
விட்டு விடுங்களேன்

ப‌ள்ளப்ப‌ட்டி ர‌விக்கு
ஏன் கூட்ட‌மில்லை

காவல்துறை
தீக்குளிப்பிற்கு வேறு
காரண்ம் கூறுகிறதே

காவல்துறைக்கும்
பொய்க்கும்
எப்போதுமா காதல்

பார்த்துத் தோழ‌ர்க‌ளே
அஞச‌லி செலு‌த்த‌ வ‌ரும்
த‌லைவ‌ர்க‌ள் அவச‌ர‌ப்ப‌ட்டு
தீக்குளித்துவிட‌ போகிறார்க‌ள்
பிறகு இந்த தேசத்தை
காப்பாற்ற‌‌ யாரிருக்கா

வாலிலே நெருப்புவைத்து
வானரத்தை அனுப்பிய‌
ராமனும் இலங்கைக்கு
கடைசியில் போனானே
யுத்தத்தில் ராவணனனை
நேராய் பார்த்தானே

இவ‌ங்க‌ எப்ப‌ போறாங்க‌
கேட்டுச் சொல்லு
டிக்கெட் ரிச‌ர்வ் ப‌ண்ண‌ணும்

லீவு நாளில்
ரிச‌ர்வேஷன் க‌ஷ்ட‌ம்
வொர்க்கிங் டேயிலேயே
போக‌ச் சொல்லு
அவ‌ங்க‌ளுக்குத்தான்
வேலையெதுவும் இல்லையே

களி தின்னும்
ஏழைக‌ளை
க‌ளித்துண்ணும்
தீயர‌க்கியே‍
உன் பெயரென்ன
சூர்ப்பநகையா

உன் ப‌சியின்னும்
அட‌ங்க‌ல்லீயா

எல்லா
ராமாய‌ண‌ப்பாத்திரங்க‌ளையும்
பார்த்து விட்டோம்
கோத்த‌ப‌யே பார்த்து விட்டோம்
பொன்சேகா பார்த்து விட்டோம்
விபீஷ்ண‌னைக் காணோமே




விபீஷ்ணா நீ எங்கிருக்கிறாய்
வெளியெ வா



ராவ‌ண‌னுக்குக் க‌ருணாவை
காட்டிய‌ க‌ட‌வுளே இருந்தால்
‘த‌ம்பி’க்கு
விபீஷ்ண‌னைக் காட்டு








ஒண்ணு ரெண்டு
வான‌ர‌ம் போதும்
ராவ‌ண‌பக் ஷே வ‌த‌த்திற்கு
அஞ்ச‌லித் த‌லைவ‌ரில்
யார் தயார்

- அக்னி தே.வால்ட்ட‌ர்

1 comment:

  1. Sir, Congrats. All the best. By, A.S.Rajendiran from Kodaikanal

    ReplyDelete